Friday, February 25, 2022

திருக்குறளும் ஜாதியும். மேல் குடியில் பிறந்தவரோகுடிமை நட்பு,

 திருக்குறளும் ஜாதியும். மேல் குடியில் பிறந்தவரோடு மட்டுமே நட்பு வேண்டும்.

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.  குறள் 793: நட்பாராய்தல்.
மணக்குடவர் உரை:ஒருவனுடைய குணமும் குடிப்பிறப்பும் குற்றமும் குறைவில்லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து, பின்பு அவனை நட்பாகக் கொள்க. இவையெல்லாம் ஒத்தனவாயின் உறவு நீளச் செல்லு மென்றவாறாம்.
மு. வரதராசன் உரை:ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குறள் 794:நட்பாராய்தல். 

மணக்குடவர் உரை:மேற்கூறியவற்றுள் உயர்குடிப்பிறந்து தன்மாட்டுப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுமவனை அவன் வேண்டிய தொன்று கொடுத்தும் நட்பாகக் கொள்ளல் வேண்டும்.
மு. வரதராசன் உரை:உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.    குறள் 954: குடிமை

மணக்குடவர் உரை:பல கோடிப் பொருளைப் பெறினும் உயர்குடிப்பிறந்தார் தங்குடிக்குத் தாழ்வாயின செய்யார். இது சான்றாண்மை விடாரென்றது.
மு. வரதராசன் உரை:பலகோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.
சாலமன் பாப்பையா உரை:கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. குறள் 957:  குடிமை

மணக்குடவர் உரை:உயர்குடிப் பிறந்தார்மாட்டுக் குற்றமுளதாயின், அது வானத்தின் மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும். ஆதலால் குற்றப்பட ஒழுகற்க. இது குற்றம் செய்தலைத் தவிர வேண்டுமென்றது.
மு. வரதராசன் உரை:உயர்குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.
சாலமன் பாப்பையா உரை:நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.  குறள் 958:  குடிமை

மணக்குடவர் உரை:ஒருவன் குடிநலத்தின்கண்ணே நீர்மை யின்மை தோன்றுமாயின் அவனைக் குலத்தின்கண் தப்பினவனென்று ஐயப்படுக.
மு. வரதராசன் உரை:ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும்.
சாலமன் பாப்பையா உரை:நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.    குறள் 959:  குடிமை

மணக்குடவர் உரை:வித்து நிலத்தின்கண் மறைந்து கிடப்பினும் அது மறைந்து கிடந்தமையை அதன் முளை யறிவிக்கும். அதுபோல உயர்குடிப்பிறந்தாரை அவரவர் வாயிற்சொல் அறிவிக்கும்.
மு. வரதராசன் உரை:இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச்சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.

திருக்குறள் மாண்பினைக் காப்பாற்றிய G.P.ஸ்ரீநிவாசன் அமரர் ஆனார்

 திருக்குறளை சிற்மை செய்ய கிறிஸ்துவ திராவிடியார் கூட்டம் செய்த முயற்சியை முறியடிக்க சென்னை பல்கலைக் கழக திருக்குறள் துறை தவறியது. 

 

மதுரை பல்கலைக் கழகத்தில் கூட பள்ளுவர் போற்றிய மெய்யியல் மரபை ஏற்காத திராவிடியார் நாவீன புலவர் தவர, தருமை ஆதின மடத்தில் விவாதத்திற்கு மோசடி முனைவர் தெய்வநாயகம் அழைக்கப் பட்டார். அவர் வந்து பலி கோட்பாடு, வேள்வி கோட்பாடு, பலி நிறைவேற்றக் கோட்பாடு, மூவொருமை என ஆரம்பித்த எதுவுமே வள்ளுவத்தில் இல்லை என புலவர்கள் காட்டிக வெறுமனே நின்று இருந்து சில மாதம் கழித்து தான் வென்றேன் என தன் பத்திரிக்கையில் சுவிசேஷமாகப் பொய் பரப்பினார். அதை முறியடிக்க தருமை ஆதினம் மற்றும் பலரைக் கண்டு தயாரித்த ஆவணக் காணொளி

ஸ்ரீரங்கம் G.P.ஸ்ரீநிவாசன் 11.02.2022 மதியம் திருநாடு அலங்கரித்தார் 

அமைதி அறிவுபூர்வ ஆழ்ந்த சிந்தனையுடன் அகிம்சை வழி போராளியாக  எளியவராக நடமாடும் நூலகராக சிறந்த வாசகராக மொழி பெயர்ப்பாளராக வாழ்ந்த நண்பர் விஷ்ணு பாதம் அடைய பிரார்த்தனை செய்கிறேன்  

 

தருமபுரம் ஆதினமடத்தில் மோசடி தெய்வநாயகம் விவாதத்தில் தோற்று ஓடியதைப் பற்றி GPS காணொளி 

 அமரர் GPS (கோமடம் பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்)  ஹிந்து (Hindu Voice)வாய்ஸ் என்ற மும்பை பத்திரிக்கையின் தமிழக செய்தியாளாராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். இதனால் அனைத்து நேர்வழி சிந்தனையாளரோடும் தொடர்பு கொண்டு ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பல வேலைகளை தனி ஒருவராக செய்து வந்தவர்.  அமரர் சேக்கிழார் அடிப்பொடி TNR (தன் அகில இந்திய நட்பு மூலம் புதிய நூல்களை அறிமுகம் செய்த) நெருங்கிய நண்பர்.  
 
  கிறிஸ்துவ மதமாற்றத்தை பற்றி கவலைபடுபவர். மதமாற்ற சக்திகளின் மோசடிகளை முழுமையாக உணர்ந்து அதை தானும் எதிர்த்து ஒரு படையையே உருவாக்கினார்,  டில்லியில் உள்ள Voice of India பதிப்ப்க நட்பில் தோமா இந்திய வருகை கட்டுக் கதையை உடைத்த கனடா நாட்டில் பாதிரி குடும்பத்தில் பிறந்து தமிழகத்தில் இந்து சாமியாராக வாழும் திரு.ஈஸ்வர் சரண் நூலை பெருமளவில் உலகெங்கும் பரவ பின்னணியில் இருந்தார். 
சென்னை கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோவிலை சாந்தோம் சர்ச் ஆக்கிரமித்து கோவில் மண்டப கட்டிடங்களை இடித்து அகற்றியது பற்றி இவருடைய கட்டுரை
இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாட்டில் இருந்த பல நேர்வழி(right wing) சிந்தனையாளர் தொட்பில் வைத்து அவர்கள் பணிகளை உற்சாகப் படுத்தியவர். ராஜிவ் மல்ஹோத்ரா Breaking India நூலை வெளியிடுமுன் ஆட்சி மாற்றம் என தடுமாறிய போது அதை வெளிவரவும் மிகவும் பரபரப்பு அறிமுகம், வெளியீடு என பின்னால் இருந்தவர்.
தொல்லியல் அறிஞர் நாகசாமி  உடையவர் ராமானுஜர் வாழ்விற்கு ஆதாரமே இல்லை என எழுத, நட்பு என்றாலும் வரலாற்று உண்மை வெளிவர வைஷ்ணவஸ்ரீ கொண்டே பதில் நூல் கொணரவும் பின்னணியில் இருந்தார்.
கிறிஸ்துவம் வெறும் கட்டுக் கதை என்ற உண்மைகளை நூலாக வர 
எனப் பல விவிலிய அறிஞர்கள் ஆய்வு நூல்கள் பதிப்பின் பின்னணியில் இருந்தார்.

சேது சமுத்திரத் திட்டம்

தூத்துக் குடியில் சேது சமுத்திரத் திட்டம் என சிறிதும் பயனற்ற ஊழலுக்கே என திட்டம், அதன் மூலம் ராமேஸ்வரத்தின் இயற்கை பொக்கிஷங்களான பவளப் பாறைகள், ராமர் சேதுவை இடிக்க தமிழர் விரோத திமுக திட்டமிட்ட போது அதனை முறியடிக்க பெரும் முயற்சி செய்து வெற்றிக்கு பின் இருந்தவர்.
 தூத்துக்குடி துறைமுக முன்னாள் தலைவர் சுந்தரம் ஐஏஎஸ், சிந்துவெளி முத்திரை படிப்பிலும், தொல்லியல் ஆய்விலும் உலகப் புகழ் பெற்ற சரஸ்வதி நதி திரு.கல்யாணராமன் பல கட்டுரைகள் எழுதிட, தஞ்சாவூரில் இருந்து சங்க தமிழ் இலக்கியம் முதல் 17ம் நூற்றாண்டு வரை தமிழில் ராமர் சேது பற்றிய குறிப்புகளை தொகுத்து 3 நூல்கள் வெளி வரச் செய்தது, உச்ச நீதிமன்றத்தில்   சுப்பிரமணிய சுவாமி வழக்கிற்கு ஆணிவேராய் இருந்தது.  கடைசி நேரத்தில் ஒரு பழைய நூலில் பெரிதும் மதிக்கப்படும் ஒரு வைணவ அறிஞர் ராமர் பாலம் இடிக்கப்பட்டது என கம்ப ராமாயணத்தில் உள்ளது என எழுதினார் என அரசு வாதிட, மிகவும் வேகமாக மற்றும் TNR +பல அறிஞர் காணொளிகள் எடுத்து தந்து வழக்கில் வெற்றியில் GPS நல்ல பங்கு உண்டு.

https://kalyan97.wordpress.com/2007/09/19/812/ 

https://sites.google.com/site/hinduthought/

 
2009இல் மும்பை சர்வ மத கூட்டத்தில் கிறிஸ்தவ கத்தோலிக்க கார்டினல் ஜீன் லூயிஸ் சூழ்ச்சி தடுத்து காஞ்சி சங்கர மடம் பூஜ்ய ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சந்திப்பின்போது கூட்டு அறிக்கையில் கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தை நிறுத்த வேண்டும் என்ற பகுதிகளை சேர்க்கப்பட இவர் பின்னணியில் இருந்ததாக நம்மிடம் கூறினார். 
 
தஞ்சாவூர் கோவிலில் இந்திய தொல்லியல் துறை செய்த பல தவறுகளை ஆவணப் படுத்தினார்.
GPS இந்து கோயில்களை பாதுகாக்க தானாகவும் பலரை கோவில்களை காக்க ஈடுபடவும் வைத்தார். இவர்   எடுத்த போராட்டங்களில் மிக முக்கியமானவை.
https://janajaati.blogspot.com/2008/08/imminent-danger-to-thanjavur-big-temple.html  
 சிதம்பரம் கோவில் வழக்கிலும் பின்னணியில் இருந்தார். 
ஸ்ரீ ரங்கம் கோவில் பூஜைகள் சரியாக நடைபெற வேண்டும் என வைணவப் பெரியவர் வைஷ்ணவஸ்ரீயோடு சேர்ந்து பல விஷயங்களை ஆவணம் செய்தும் வழக்குகள் தொடரவும் உதவினார்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழையலாம் என்ற தீர்ப்பில் ஆரம்பத்தில் பாஜக தலைமை சரியான முடிவு எடுக்காது நின்ற போது, திரு.அமித் ஷா அவர்களுக்கு முழு விபரத்தை மெயிலில் விளக்க, அவரும் நன்றி சொல்லி பாரம்பரியம் காக்க மத்திய அரசு உதவிட பணி பின்னணியில் GPS. 
கோவில் இறைவன் திருமேனிகள் திருட்டைத் தடுக்க பல நடவடிக்கை எடுத்தார்
அமரர் G.P.ஸ்ரீநிவாசன் GPS + தேவப்ரியா நட்பு
சென்னையில் திராவிடச் சான்றோர் பேரவை மாநாடு நிகழ்வில் பழகி என்னோடு நெருக்கமான நண்பராக இறுதி வரை இருந்தார்.
  
IAS Sundaram speeking                               TNR speaking
I
    Maanadu in Dinamani News                     John Ganesh Iyer's Lawyer Krishna Rao
ஸ்ரீரங்கம் அவர் இல்லம் சென்றபோது தஞ்சாவூர் சென்று பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சில மிகப் பெரும் பழைய கோவில் சிலைகளைப் பார்க்க  அங்கே மூத்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்,  வக்கீல் கேட்ட பல கேள்விகளுக்கு நான் கொடுத்த பதில்கள் பற்றி GPS சந்தேகப்பட திரு.TNR வீடு சென்று நண்பர் குடவாயில் பாலசுப்ரமணியம் அழைத்திட, என் பதில்கள் சரியே எனப் புரிந்து கொண்டார். அப்போது குடவாயில் அவர்கள் ராஜராஜன் சிலை குஜராத் முசியத்தில் உள்ளது கூற, வக்கீல் அதை சிலை கடத்தல் பிரிவு டிஜிபி பொன் மாணிக்கவேலிடம் சொல்ல அது மீட்கப்பட்டதில் என்க்கள் பங்கும் உண்டு.
சிலை கடத்தல் பிரிவு டிஜிபி பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிக்கப் படவேண்டும் என வழக்கறிஞர் ஸ்ரீதர் வழக்கு போட வைத்தார். 
   
 
 தேவப்ரியா அன்றைய கவர்னரிடம் அனுமதி பெற்று டிஜிபி பொன் மாணிக்கவேல்  பதவி நீட்டிப்பிற்கு மனுவும் தந்தோம் 

ஸ்ரீரங்கம் GP ஸ்ரீநிவாசன் (63) திருக்குறள், விவிலியம் பற்றி என் நூல்கள் வெளிவர பல விதங்களில் தூண்டி முயற்சித்தார், நான் முடிக்கவில்லை. பல நண்பர்களை ஏற்படுத்திக் கொடுத்தவர். நான் விரைவாக என் நூல்கள் எழுதி அவருக்கு சமர்ப்பணம் செய்வதே என்னால் இன்று இயலும்.
மரணத்தில் GPS கொடுத்துள்ள பாடம் 
ஒவ்வொருமுறை சந்திக்கும் பொழுதும் அல்லது போனில் பேசும் பொழுதும் ஒரு புதிய நூலையோ அல்லது ஒரு புதிய நண்பரைப் பற்றி கூறி அவரோடு அவருடைய என்னை சேர்க்க பார்ப்பார். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக நான் பலமுறை நேரில் போனில்/சந்தித்த போதும்    அவரை கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்ட பொழுதெல்லாம் போட்டுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அதைப் போட்டுக் கொள்ளாததால் 63 வயதான இந்த இளைய வயதில் தன் உயிரை அவர் கொடுக்க நேர்ந்தது.  எனவே தயவு செய்து இதைப் படிப்பவர்கள் அனைவரும் உடனடியாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்னும் பாடத்தை தன் மரணத்தின் மூலம் GPS நமக்கெல்லாம் படிப்பினையாக கொடுத்துள்ளார்.