Friday, June 29, 2018

திருக்குறள் மணக்குடவர் உரை

திருக்குறள் 800 வாக்கில் பெரும்பாலும் 9ம் நூறாண்டின் ஆரம்பத்தை சேர்ந்தது, திருக்குறள் எழுந்த அடுத்த நூறாண்டில் எழுந்த உதல் தமிழ் உரை. மணக்குடவர் ஜைனர்.

திருவள்ளுவர் - வேதங்களைப் போற்றி நாட்டின் அரசன் ஆட்சியின் செங்கோல் வேத - தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையாய் விளங்க வேண்டும் என்கிறார். அதே அரசன் கொடுங்கோலனாய் இருந்தால் பசுக்கள் பால் தராது, அந்தணர் வேதங்களை மறப்பர் என்கிறார்.

 உரையாசிரியர்களுள் காலத்தால் முதன்மையானது, வள்ளுவர் குறள் எழுதி 100- 150 ஆண்டிற்குள் எழுதப் பட்ட உரை. இதன் ஆசிரியர் ஒரு சமணர், ஆயினும் அவர் உரையின் சில முக்கிய குறள்களைப் பார்ப்போம்.


மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.                    குறள் 134: ஒழுக்கமுடைமை


மணக்குடவர் உரை:
பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை:
ஒழுக்கம் உடைமை குடிமை - எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம் , இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும். (பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் 'குடிமையாம்' என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.).


அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                  குறள் 543:        செங்கோன்மை


மணக்குடவர் உரை:
அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.
 பரிமேலழகர் உரை:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும், அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது, மன்னவன் கோல் - அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல்.
(அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி அந்தணர் நூல் என்றார். 'மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்' (மணி. 22 208 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு 'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும், அப் பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் 'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.) .


ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.                             குறள் 560:          கொடுங்கோன்மை
மணக்குடவர் உரை:
பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.
பரிமேலழகர் உரை:
காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
(ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.).

சமணர் மணக்குடவரும் திருவள்ளுவர் நல்ல நாடு செயல் பாட்டிற்கு வேதங்களே அடிப்படை எனத் தான் பொருள் கொண்டுள்ளார்.

ரிமேலழகர் உரையை வைதீக சார்பானது என்போர் திருவள்ளுவரைப் புரிந்து கொள்ளவில்லை, அல்லது கிறிஸ்துவக் காலனி ஆத்க்கம் பரப்பிய பொய்களின் அடிமை , தமிழர் மெய்யியலின் பகைவர்கள் என்பது தெளிவாகும்










திருக்குறள் பரிப்பெருமாள் உரை

திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை

 பரிப்பெருமாள் காலம் 11 ஆம் நூற்றாண்டு எனத் தெளிவாகத் தெரிகிறது. இவரது உரை மணக்குடவர் உரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. எனவே மணக்குடவர் காலம் 10 ஆம் நூற்றாண்டு என்பதாகிறது. ஏனைய மூவர் உரைகளைக் காலிங்கர், பரிப்பெருமாள், பரிமேலழகர் எனக் கால வரிசைப்படுத்தலாம். பரிதியார் உரை காலிங்கர் உரையைத் தழுவிச் செல்கிறது.









திருக்குறள் (ஜைன உரை

திருக்குறள் (ஜைன உரை









Sunday, June 24, 2018

மாணவர்களுக்குத் திருக்குறளை பயிற்றுவிக்க வேண்டும் -உயர்நீதிமன்ற தீர்ப்பு

உயர்நீதிமன்ற தீர்ப்பு



ஓர் உயர்நீதிமன்றத் தீர்ப்பு எந்த அளவுக்கு சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை நீதியராயம் 2016-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நீதிபதி ஆர். மகாதேவன் அளித்தத் தீர்ப்பு உணர்த்துகிறது. அவரது அமர்விற்கு முன்னால் ஒரு வழக்கு வந்தது. அந்த வழக்கின் அடிப்படையில் நீதிபதி ஆர். மகாதேவன் வழங்கிய தீர்ப்பு இப்போது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக உலகளாவிய தமிழ் ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது.
ஓய்வு பெற்ற அரசு அலுவலர் எஸ்.ராஜரத்தினம் என்பவர், இளைய சமுதாயத்திடம் குறைந்துவரும் ஒழுக்க சிந்தனைக்குத் தீர்வாக ஆறாம் வகுப்பிலிருந்து ப்ளஸ் டூ வரையில் மாணவர்களுக்குத் திருக்குறளை அறத்துப்பால் மற்றும் பொருட்பாலிலுள்ள அனைத்து குறட்பாக்களையும் பயிற்றுவிக்க வேண்டும் என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 2011-ஆம் ஆண்டில் வழக்குகளில் கைது செய்யப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை 2,083 என்றும், அவற்றுள் 1, 170 பேர் தொடக்கக் கல்வி பயின்றவர்கள், 617 பேர் இடைநிலை கல்வி பயின்றவர்கள், 56 பேர் 12-ஆம் வகுப்புக்கு மேலான உயர்கல்வி படித்தவர்கள், 240 பேர் படிக்காதவர்கள் என்கிற புள்ளிவிவரத்தையும் தனது மனுவில் இணைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஆர். மகாதேவன், திருக்குறளிலுள்ள 108 அதிகாரங்களை அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிக்கூடங்களில் தனிப் பாடமாக வைக்க வேண்டும் என்றும், அதை அரசினால் நியமிக்கப்பட்ட குழு தயாரிக்க வேண்டும் என்றும், மாநில அரசு அமைக்கும் அந்தக் குழு இந்திய அரசியல் அமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, புதிய வரலாறு படைத்தார்.
வழக்கமாக உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் உடனயாக நடைமுறைப் படுத்தப்படாமல் கிடப்பில் போடப்படுவதுதான் வழக்கம். ஆனால், தமிழக வரலாற்றில் இன்னொரு மிகப்பெரிய திருப்புமுனையாகத் தமிழக அரசு உடனடியாக நீதிபதி ஆர்.மகாதேவனின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முற்பட்டது என்பது மனுதாரரின் அக்கறையும் கவலையும் ஒட்டுமொத்த சமுதாயத்திலும் காணப்படுகிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவனின் தீர்ப்பு மொரீஷியஸ் நாட்டில் எதிரொலித்தது. மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த சர்வதேச திருக்குறள் அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அந்தத் தீர்ப்பை அப்படியே ஒரு சிறிய புத்தகமாக வெளியிட்டார். இந்தக் கையேடு உலகிலுள்ள பல தமிழார்வலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் கையேடு இப்போது ஐ.நா. சபையின் யுனெஸ்கோவையே திருக்குறள் குறித்து சிந்திக்க வைத்திருக்கிறது.
நாடு, மொழி, இனம், மதம், ஜாதி எனும் அடையாளங்களைக் கடந்த நூலாக இருந்து, வாழும் ஒவ்வொருவருக்கும் உலக நன்மைக்கும் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டிய நூலாக உலக வரலாற்றில் நீதிமன்றத்தால் அடையாளம் காட்டப்பட்ட திருக்குறள், விரைவிலேயே உலக நூலாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட இருக்கிறது எனும்போது, உயர்நீதிமன்றத் தீர்ப்பின் வீச்சு எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் உணரலாம்.
அடுத்த பத்தாண்டுகளில் கோடிக்கணக்கான தமிழ் இளைஞர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்குறளைப் படித்தவர்களாக, குறைந்தபட்சம் ஒருமுறையாவது படித்தவர்களாக, உருவாகப் போகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய சாதனை. இந்த சாதனைக்குக் காரணமான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அலுவலர் ராஜரத்தினம், நீதிபதி ஆர்.மகாதேவன், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, மொரீஷியஸ் சர்வதேச திருக்குறள் அமைப்பின் நிறுவனர் ஆறுமுகம் பரசுராமன் ஆகியோருக்குத் தமிழ்ச் சமூகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும். நீதிபதி ஆர்.மகாதேவனின் தீர்ப்பு "திருக்குறள் : தீர்ப்பு தரும் தீர்வு' என்கிற பெயரில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலிருந்து திருக்குறளைப் பள்ளிக் கல்விப் பாடத்தில் சேர்க்க தமிழக அரசுக்கு ஆணையிட்டு அளித்த, தீர்ப்பும், தீர்ப்பின் மீதான புரிதல்களையும் உள்ளடக்கியது இந்நூல். இதன் பதிப்பாசிரியர் நல்லூர் சா.சரவணன்.

திருவள்ளுவர் காலம் - பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை காலம்

திருவள்ளுவர் காலம் - பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை காலம்