Friday, June 29, 2018

திருக்குறள் மணக்குடவர் உரை

திருக்குறள் 800 வாக்கில் பெரும்பாலும் 9ம் நூறாண்டின் ஆரம்பத்தை சேர்ந்தது, திருக்குறள் எழுந்த அடுத்த நூறாண்டில் எழுந்த உதல் தமிழ் உரை. மணக்குடவர் ஜைனர்.

திருவள்ளுவர் - வேதங்களைப் போற்றி நாட்டின் அரசன் ஆட்சியின் செங்கோல் வேத - தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையாய் விளங்க வேண்டும் என்கிறார். அதே அரசன் கொடுங்கோலனாய் இருந்தால் பசுக்கள் பால் தராது, அந்தணர் வேதங்களை மறப்பர் என்கிறார்.

 உரையாசிரியர்களுள் காலத்தால் முதன்மையானது, வள்ளுவர் குறள் எழுதி 100- 150 ஆண்டிற்குள் எழுதப் பட்ட உரை. இதன் ஆசிரியர் ஒரு சமணர், ஆயினும் அவர் உரையின் சில முக்கிய குறள்களைப் பார்ப்போம்.


மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.                    குறள் 134: ஒழுக்கமுடைமை


மணக்குடவர் உரை:
பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை:
ஒழுக்கம் உடைமை குடிமை - எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம் , இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும். (பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் 'குடிமையாம்' என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.).


அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                  குறள் 543:        செங்கோன்மை


மணக்குடவர் உரை:
அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.
 பரிமேலழகர் உரை:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும், அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது, மன்னவன் கோல் - அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல்.
(அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி அந்தணர் நூல் என்றார். 'மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்' (மணி. 22 208 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு 'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும், அப் பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் 'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.) .


ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.                             குறள் 560:          கொடுங்கோன்மை
மணக்குடவர் உரை:
பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.
பரிமேலழகர் உரை:
காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
(ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.).

சமணர் மணக்குடவரும் திருவள்ளுவர் நல்ல நாடு செயல் பாட்டிற்கு வேதங்களே அடிப்படை எனத் தான் பொருள் கொண்டுள்ளார்.

ரிமேலழகர் உரையை வைதீக சார்பானது என்போர் திருவள்ளுவரைப் புரிந்து கொள்ளவில்லை, அல்லது கிறிஸ்துவக் காலனி ஆத்க்கம் பரப்பிய பொய்களின் அடிமை , தமிழர் மெய்யியலின் பகைவர்கள் என்பது தெளிவாகும்










2 comments:

Unknown said...

Podi Munda

DEVAPRIYA said...

ஐயா சர்ச் ஊழியமாக வார்த்தை விடுகிறீரே

Post a Comment