Tuesday, March 31, 2020

திருக்குறள் நேர்மையான ஆராய்ச்சியில் தமிழர் மரபில் உச்சம் தொட்ட தமிழ் சான்றோர்கள்

திருக்குறள் இந்திய தத்துவ ஞான மரபில் எழுந்த வேதாந்த சாரம் என்பது தமிழ் மரபு அறிஞர்கள், திருவள்ளுவ மாலை சொல்லும் கருத்து.

கோ. வடிவேலு செட்டியார்- கோ. வடிவேலு செட்டியார் (K. Vadivelu Chettiar 1863 - 1936அத்வைத வேதாந்தம், மற்றும் தமிழ் இலக்கணஇலக்கியங்களிலும்தர்க்கத்திலும் பெரும் புலமை பெற்ற தமிழறிஞர். "மகாவித்துவான்" என்று அறிஞர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர்.

மஹாவித்வான் கோ. வடிவேலு செட்டியார்


19ம் நூற்றாண்டின் இறுதியில்/20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பெருந்தகை மஹாவித்வான் கோ. வடிவேலு செட்டியார் (1863-1936) அவர்கள். ஆன்றோர்களால் இலக்கண இலக்கிய தருக்க வேதாந்த போதகாசிரியர் என்று மதித்துப் பாரட்டப் பெற்றவர்.

இப்பதிவில் அவர் எழுதி வெளியிட்ட நூல்கள், பதித்து அச்சிட்ட நூல்கள், மொழிபெயர்த்து அச்சிட்ட நூல்கள் பற்றி சேகரித்த தகவல்களைக் காணலாம். அவற்றுள் வலைத்தளங்களில் காணக்கிடைக்கும் சுட்டிகள் (external links) தொகுக்கப்பட்டுள்ளன.

இவ்வரிய நூல்களை மின்னாக்கம் செய்து பதிவேற்றிய அன்பு உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றி.
எழுதி/மொழிபெயர்த்து வெளியிட்ட நூல்கள்ஆண்டு
நாநாஜீவவாதக்கட்டளை குறிப்புரையுடன் (முதல் பதிப்பு)1904
திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் - தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும் (முதல் பதிப்பு) - 2 vol1904
ரிபுகீதைத் திரட்டு குறிப்புரையுடன்1906
மதுசூதன சரஸ்வதி சுவாமிகள் அருளிச்செய்த சித்தாந்த பிந்து1906
தர்மராஜ தீக்ஷித சுவாமிகள் அருளிச்செய்த வேதாந்த பரிபாஷை1907
தர்க்கப் பரிபாஷை குறிப்புரையுடன்1908
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச்செய்த வேதாந்த சூளாமணி மூலமும் விரிவுரையும் குறிப்புரையுடன்1908/1909
நாநாஜீவவாதக்கட்டளை குறிப்புரையுடன் (இரண்டாம் பதிப்பு)1909
ஸ்ரீ வித்தியாரண்ய சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய சர்வதரிசன சங்கிரகம்1910
யக்ஷ தரும சம்வாதம்191?
மெய்ஞ்ஞான போதம் - 11913
வியாச போதினி - முதல் பாகம்1914
கைவல்லிய நவநீதம் வசனம் - வினாவிடை1915
வியாச போதினி - இரண்டாம் பாகம்1916
மகாராஜா துறவு வசனம்1917
ஸ்ரீ சேஷாத்திரி சிவனார் அருளிச்செய்த நாநாஜீவவாதக்கட்டளை குறிப்புரையுடன் (திருத்தமான மூன்றாம் பதிப்பு)1917
புனிதவதி: காரைக்கால் அம்மையார்1917
திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் - தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும் - ஆங்கில மொழிபெயர்ப்புடன் (திருத்தமான இரண்டாம் பதிப்பு) - Volume 1Volume 21919
கந்தரநுபூதி மூலமும் தெளிபொருள் விளக்க விருத்தி உரையும்1920?
கைவல்லிய நவநீத வசன வினாவிடை விரிவுரையுடன்1923
தத்துவராய சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய சசிவன்ன போதம் வசனம் - பதவுரை - விஷேச உரையுடன்1923
பரமார்த்த தரிசனமென்னும் பகவத் கீதை வசனம் - விரிவாய குறிப்புரையுடன்1924
திருமுருகாற்றுபடை மூலமும் பரிமேலழகர் உரையும்1924
ஸ்ரீ சேஷாத்திரி சிவனார் அருளிச்செய்த நாநாஜீவவாதக்கட்டளை விஷேச குறிப்புரையுடன் (திருத்தமான நான்காம் பதிப்பு)1925
ஸ்ரீ கருணாகர சுவாமிகள் அருளிசெய்த உபநிடத மூலமும் உரையும்1925
வேதாந்த சூடாமணி வசன வினாவிடை பதவுரையுடன்1927
மெய்ஞ்ஞான போதம் - 21928
ஒரு பெண்ணரசியின் பிரஹ்மஞாநோபதேசம் - சூடாலை1928?
சிவஞான போத மூலமும் தெளிபொருள் விளக்கவுரையும்1929
பரமார்த்தபோத வசன வினாவிடை: யோகானந்த ஆத்மானந்த சம்பாஷணை1929
ஞான உவமை வெண்பாவும் மனன உவமை வெண்பாவும் தத்துவாதத்துவ விவேக போத வசன வினாவிடையும்1932


பரிசோதித்து/பார்வையிட்டு அச்சிட்ட நூல்கள்ஆண்டு
நவநீத சாரம்1903
நாலடியார் என்று வழங்கும் நாலடி நானூறு மூலமும் உரையும் - ஆங்கிலேய மொழிபெயர்ப்புடன்1903
ஸ்ரீ குமாரதேவர் திருவாய்மலர்ந்தருளிய சாஸ்திரக்கோவை1904
வேதாந்த சாரம் வினாவிடை1905
நிச்சல இராமாநந்த சுவாமிகள் இயற்றியருளிய ஞானாயி போதம்1905
நிச்சல இராமாநந்த சுவாமிகள் இயற்றியருளிய மோக்ஷசாதன விளக்கம்1906
ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் அருளிச்செய்த கந்தபுராண மூலமும் வசனமும் - 2 vol (volume 1volume 2)1908
வேதாந்தப் பிரதீபம்1909
ஸ்ரீ பகவதநுகீதை1909
நாலடியார் என்று வழங்கும் நாலடி நானூறு மூலமும் உரையும் (இரண்டாம் பதிப்பு)1909
ஸ்ரீ புஷ்பதந்தாசிரிய ரென்னுங் கந்தர்வ விறைவர் தேவவாணியிற் றிருவாய்மலர்ந்தருளிய சிவமஹிம்ந ஸ்தோத்திரம்1909
ஸ்ரீசங்கரபூஜ்ய பகவத்பாதாச்சார்ய ஸ்வாமிகள் திருவாய்மலர்ந்தருளிய விவேக சூடாமணி1909
வலங்கை மீகாமனார் அருளிச்செய்த அறிவானந்த சித்தியார்1909
ஔவைப் பிராட்டியார் திருவாய்மலர்ந்தருளிய ஆத்திசூடி மூலமும் - பாகியார்த்தமும், ஆந்தரார்த்தமும்1910
சிவப்பிரகாசப் பெருந்திரட்டு குறுந்திரட்டுடன் (சுட்டி 2 & சுட்டி 3)1912
வாக்கியசுதை என்னும் திருக்கு திருசிய விவேகம் மூலமும் உரையும்1912
நிச்சல இராமாநந்த சுவாமிகள் இயற்றியருளிய பரமார்த்த நியாயத் தீர்ப்பு1913
ஸ்ரீ ஜகதீச பட்டாசாரியர் அவர்கள் சமஸ்கிருதத்தில் திருவாய்மலர்ந்தருளிய தர்க்காமிர்தம்1913
மஹாபாகவதத் திரட்டு1915
மனத்திற்குறுத்து மதி விளக்கம் (லோகோபகாரி பிரசுரம்)1916
கற்பு விளக்கம்1917
அன்னதான விளக்கம்1918
கருணை விளக்கம்1921
நன்மதி தீபம்1923
திருக்குறள் மூலமும் மணக்குடவருரையும்1925
நாலடியார் என்று வழங்கும் நாலடி நானூறு மூலமும் உரையும் - ஆங்கில மொழிபெயர்ப்பும்1926
ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய கந்தர் கலிவெண்பா மூலமும் உரையும்1926
நீதிவாக்கிய மஞ்சரி: 208 நீதி விஷயம் அடங்கியது1921
ஞானசார விளக்கம்1927
விபூதி விளக்கம் மூலமும் விபூதி மஹாத்மிய வசனமும்1927
துறவுநிலை விளக்கம்1928
திரிகடுகம் மூலமும் உரையும்1928
ஸ்ரீ பட்டனார் அருளிச்செய்த பரமார்த்த தரிசனமென்னும் பகவத் கீதை மூலம்1931
இல்லற ஒழுக்க விளக்கம்1931
போத விளக்கம்1931
சாமி விளக்கம்1931
கற்பு விளக்கம்1932
அநுபவாநந்த விளக்கம்1932
நிச்சல இராமாநந்த சுவாமிகள் இயற்றியருளிய வேதாந்த சாரமென்னும் அபேத தருப்பணம்1961


திரு.ச.தண்டபாணி தேசிகர்
திரு.அருணை வடிவேல் முதலியார்
செல்வி காமாட்சி சீனிவாசன்

திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு- தமிழ் மரபில் வள்ளுவப் பொக்கிஷம்

தமிழிற்கு தன் வாழ்நாளை அற்பணித்து வாழ்ந்த பண்டை தொல் பிராமண அறிவுக்குடியில் பிறந்த கி.வா.ஜகந்நாதன்.


திருக்குறள் இந்திய தத்துவ ஞான மரபில் எழுந்த வேதாந்த சாரம் என்பது தமிழ் மரபு அறிஞர்கள், திருவள்ளுவ மாலை சொல்லும் கருத்து.


கி.வா.ஜகந்நாதன்  அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட 147 நூல்கள்

http://thfreferencelibrary.blogspot.com/2014/03/blog-post_2584.html



“திருக்குறள் சம்பந்தமாகப் பெரிய வேலை ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது; என்ன செய்யலாம்?” என்று கேட்டார். “மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் (உ.வே.சா) திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தார்கள். திருக்குறளுக்குக் கிடைக்கும் பழைய உரைகளையெல்லாம் தொகுத்து ஒவ்வொரு குறளின் பின்னும் அமைத்து, இலக்கண, இலக்கிய உரைகளில் குறளை மேற்கோளாகக் காட்டும் இடங்களை அங்கங்கே காட்டி, தொல்காப்பியம் முதல் இக்கால இலக்கியம் வரை குறளில் சொற்பொருள்களை எடுத்தாண்ட ஒப்புமைப் பகுதிகளையும் இணைத்து, வேண்டிய அடிக்குறிப்புகளும், அகராதிகளும், ஆராய்ச்சியுரையும் சேர்த்து வெளியிட வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணம். அந்த எண்ணம் அவர்கள் காலத்தில் நிறைவேறவில்லை. அதைச் செய்யலாம்” என்றேன்.

1950 வாக்கில் நடந்த இந்த உரையாடலில் கேள்வி தொடுத்தவர் அமரர் தி.சு.அவிநாசிலிங்கம். பதிலிறுத்தவர் உ.வே.சாவின் சிறந்த மாணாக்கரான அமரர் கி.வா.ஜகந்நாதன். இதன் உந்துதலால், இந்திய அரசின் ஆதரவுடன் 1950-ல் தொடங்கிய இந்த ஆராய்ச்சி கி.வா.ஜ அவர்களின் இடையறாத உழைப்பினால் 1963-ல் முடிவுற்றது. கி.வா.ஜ அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1963-ஆம்

ஆண்டு அப்போதைய ஜனாதிபதி திரு. ராதகிருஷ்ணன் அவர்களால் “திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு” முதன்முதலில் வெளியிடப் பட்டது. வந்திருக்கிறது. 2004-ஆம் ஆண்டு  திருக்குறளிற்கும் தமிற்கும் ஒப்பற்ற தொண்டு ஆற்றி வரும் ஸ்வாமி.ஓம்காரனந்தா அவர்கள் கேட்டுக்கொள்ள - கோயம்புத்தூர் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் 2ம் பதிப்பு வெளியிட்டது
ஒவ்வொரு குறளுக்கும்-• திருக்குறள் மூலம்


• பரிமேலழகர் உரை (முழுமையாக)
தமிழின் ஒப்புயர்வற்ற நூல்களில் தலையாயது தெய்வப் புலவர் இயற்றிய திருக்குறள். அந்தக் குறள் என்னும் ஆழ்கடலில் மூழ்கித் திளைக்க விரும்புவோர் அனைவருக்கும் பேருதவி புரியும் நூல் இது. 1133 பக்கங்கள் உள்ள பெரிய அளவு (அட்லாஸ் போல) புத்தகம்.
• உரை வேறுபாடு : மணக்குடவர், பரிதியார், பரிப் பெருமாள், காளிங்கர், கவிராஜபண்டிதர், எல்லிஸ் துரை இவர்களது உரைகள் பரிமேலழகர் உரையுடன் வேறுபடும் இடங்கள்
• ஒப்புமை: குறளின் சொல், பொருளை எடுத்தாளும் பிற இலக்கியங்கள். இதில் இறையனார் அகப்பொருள் உரை, தண்டியலங்காரம், நேமிநாதம், கல்லாடம் திருவாய்மொழி, தேவாரம், கம்பராமாயணம் உள்ளிட்ட ஏறக் குறைய 100 நூல்களிலிருந்து மேற்கோள்கள் தரப் படுகின்றன
• அடிக்குறிப்புக்கள்

பொதுப் பகுதிகளாக,
• திருவள்ளுவ மாலை, உரையுடன்
• திருக்குறள் சொல் அகராதி, பொருள் அகராதி, பொது அகராதி (200 பக்கங்கள்)
• நூலின் தொடக்கத்தில் குறளின் பல்வேறு வகைப் பட்ட தன்மைகளையும், சிறப்புக்களையும் விளக்கும் பதிப்பாசிரியர் கி.வா.ஜவின் மணியான, விரிவான முன்னுரை (104 பக்கங்கள்)
• பல அறிஞர்களின் அருமையான கட்டுரைகள்: திரு. அ.ச. ஞானசம்பந்தனின் “திருக்குறளில் கவிதைப் பண்பு”, இலங்கை பேராசிரியர் க.ச.அருள்நந்தியின் “வள்ளுவரின் உளநூல்”, டாக்டர் டி.எம்.பி. மகாதேவனின் “திருக்குறளின் தத்துவம்”, டாக்டர் மா.இராசமாணிக்கனாரின் “திருவள்ளுவர் காலம்”
• டாக்டர் அவ்வை நடராசன், டாக்டர் பொன். கோதண்டராமன், சுவாமி கமலாத்மானந்தர் ஆகியோரது அணிந்துரைகள்



இன்றைக்கு தமிழின் மெய்யியல் தத்துவம் மீது நம்பிக்கையற்ற ஒரு மூட திராவிட கும்பல்- திருக்குறள் ஆய்வு என கோட்பாடுகள் என வகுப்பவர்கள் பொய்கள் இவரது இந்த திருக்குறள் களஞ்சியம் முன் வீழ்ந்துவிடும்