Sunday, June 24, 2018

திருக்குறள் கிறிஸ்துவ நூலா- தொடர்பே இல்லை. பேராசிரியர் P.S.ஏசுதாசன்

 திருக்குறள் கிறிஸ்துவ நூலா- தொடர்பே இல்லை. பேராசிரியர் P.S.ஏசுதாசன்
பேராசிரியர்-  முனைவர் ப.ச. ஏசுதாசன் - திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி  தமிழாய்வுத்துறை தலைவர் (ஓய்வு) எழுதிய நூல்-
 
திருக்குறள் கடவுள் வாழ்த்தில் உள்ள எல்லப் பட்டங்களும் ஏசுவின் பைபிள் கதைகளுக்கு சற்றும் பொருந்தாமை இங்கு காணலாம்

திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.”
பக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

 

  முடிவாக –
“திரு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு தான் திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.”
பக்கம் -167திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

That is New Testament – the books of Christianity has nothing in common with KuraL

திருவள்ளுவ்ர் எழுதிய திருக்குறளை கிறிஸ்துவர்கள் எவ்வளவு தூரம் அவமானப் படுத்த இயலுமோ அவ்வளவு செய்துள்ளனர், திருக்குறளிற்கு 20ம் நூற்றாண்டில் பொருந்தாத பல உரைகளை எழுதியதை வைத்து - திருவள்ளுவர் திருக்குறள் -தமிழர் பண்பாட்டு  நூல் இல்லை - கிறிஸ்துவ பைபிள் கதை நூலின் தழுவல் என புனைந்தனர்.
 சர்ச் 100% காசில் தமிழ் கிறிஸ்துவத் துறை என ஆரம்பித்து பைபிள் போதனையால் தான் திருக்குறள் வந்தது, அதன் எழுச்சியே சைவம், வைணவம் என பல பிதற்றல் முனைவர் பட்டக் குப்பைகள் வழங்கப் பட்டுள்ளன.
எனவே தான் திருக்குறள் மீது மதிப்பு கொண்டு நேர்மையான ஆய்வாளர் நூலை இங்கு தந்துள்ளோம்

Saturday, June 23, 2018

திருக்குறளை இழிவு செய்யும் தமிழ் பகை(புல)வர்கள் - 2.பாவலேறு பெருஞ்சித்திரனார்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை             (அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:43)
இறந்த முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்

இறந்த முன்னோர்களுக்கு கடன் செய்தல் நமது சமயத்தின்ன் மிக முக்கியமானது.
  

தமிழர் பாரம்பரியத்தில் - கடவுள் வழிபாட்டில் நம்பிக்கையில்லாதோர் திருக்குறளை ஏற்காமல் வீசலாம்,  திருவள்ளுவர் ஆஸ்திகர், ஆனால் நல்ல கல்விப் புலமை உள்ள தமிழறிஞர்கள் குறளிற்கு பைத்தியக்காரத்தனமாய் உரை சொல்லுதல் சிறந்த உதாரணம். 

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 







மணக்குடவர் உரை:
பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
முன்னோர்கள், தெய்வம், விருந்து, சுற்றம், தான் என்ற ஐந்திடத்தும் செய்யவேண்டிய நல்வழியினைப் போற்றிக் காத்து வழுவாமல் நடந்துகொள்ளுதல் சிறப்புடைய அறமாகும்.

தெய்வத் தமிழ் மரபை இழிவு செய்யும்   பாவலேறு பெருஞ்சித்திரனார்  தமிழ் பகைவரே

திருக்குறளை இழிவு செய்யும் தமிழ் பகை(புல)வர்கள் - 1.இலக்குவனார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை             (அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:43)
இறந்த முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்

இறந்த முன்னோர்களுக்கு கடன் செய்தல் நமது சமயத்தின்ன் மிக முக்கியமானது.
  

தமிழர் பாரம்பரியத்தில் - கடவுள் வழிபாட்டில் நம்பிக்கையில்லாதோர் திருக்குறளை ஏற்காமல் வீசலாம்,  திருவள்ளுவர் ஆஸ்திகர், ஆனால் நல்ல கல்விப் புலமை உள்ள தமிழறிஞர்கள் குறளிற்கு பைத்தியக்காரத்தனமாய் உரை சொல்லுதல் சிறந்த உதாரணம். 

சி. இலக்குவனார் 



 மணக்குடவர் உரை:
பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
முன்னோர்கள், தெய்வம், விருந்து, சுற்றம், தான் என்ற ஐந்திடத்தும் செய்யவேண்டிய நல்வழியினைப் போற்றிக் காத்து வழுவாமல் நடந்துகொள்ளுதல் சிறப்புடைய அறமாகும்.

தெய்வத் தமிழ் மரபை இழிவு செய்யும்   சி. இலக்குவனார்  தமிழ் பகைவரே


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:43
மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை.
தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.
பரிமேலழகர் உரை: தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம்.
(பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார' என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.)
இரா சாரங்கபாணி உரை: இறந்த முன்னோர், வழிபடும் தெய்வம், விருந்து, சுற்றம், தன் குடும்பம் எனப்பட்ட ஐந்திடத்தும் அறநெறி வழுவாது காத்தல் இல்லறத்தானுக்குத் தலைமையான அறம்.




இந்துக்கள் தினமும் பஞ்சயக்ஞம் செய்யவேண்டும் என்பதை வள்ளுவன் இரண்டே வரிகளில் சொல்லும் குறள் இது. ஆறாவது பகுதி தானியத்தை மன்னனுக்கு வரியாகச் செலுத்தவேண்டும்.
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வர் பெறா அதீரும் (புறம்-9)
என்று சொல்லி நெட்டிமையார் என்னும் புலவரும் ஆரிய திராவிட வாதத்துக்கு செமை அடி கொடுப்பார். இறந்தோருக்கு திதி, தர்ப்பணம் செய்வதை அழகாக எடுத்துரைக்கிறார் புறநானூற்றுப் புலவர்.
தென்புலத்தார் [[முன்னோர்கள் /பித்ருகள் ] ]வழிபாடு : மாஹளைய அமாவாசை :23-9-14........
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை - குறள்....
இறந்து தென்திசையில் வாழ்பவர்களாகிய முன்னோர்கள்[தென்புலத்தார்/பித்ருகள் ] ,தெய்வம், விருந்தினர்கள் , சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது இல்லறத்தானின் தலையாய கடமைகளாகும்.வள்ளுவர் இல்லறத்தானுக்குரிய ஐந்து கடமைகளை சொல்லும்போது முதலில் தென்புலத்தார் எனும் பிதுர்கடன், தெய்வகடன்,முன் அறிமுகம் இல்லாத விருந்தினர் கடன் ,உறவினர் கடன் , குடும்பஸ்தனாக மனைவி மக்கள் கடன் ,என்று சொல்லி அதில் பிதுர்களுக்கு செய்ய வேண்டிய ஆற்ற வேண்டிய காரியங்களை முதலில் சொல்வதிலிருந்தே இதன் முக்கியத்துவம் தெரிகிறது .ஏன் கடமை என்று சொல்லாமல் கடன் என்று சொல்கிறோம் கடமை தவறினால் கூட பரவாயில்லை .ஆனால் பட்ட கடனை அடைக்க வேண்டும் ஒவ்வொரு வருக்கும் நாம் இதை செய்ய கடன்பட்டிருக் கிறோம்.புத்திரன் என்ற சொல்லுக்கு பிதுர்க்கடன் ஆற்றுபவன் என்று பொருள் .
பெற்றோர்களுடன் வாழ்ந்த காலத்தில் அவர்களைச் சீராக கவனிக்காதவர்கள்கூட, அவர்கள் இந்த உலகைவிட்டு மறைந்தபின் மிகுந்த பக்தியுடன் பிதுர்பூஜை செய்து வழிபட்டு மனதில் உள்ள உறுத்தலையும் அச்சத்தையும் போக்கிக் கொள்கிறார்கள்.முன்னோர்கள் தெய்வமாக நம்முடன் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.நம் முன்னோர்கள் இறந்த உடன் அந்த ஆன்மா அதன் வினைக்கேற்ப முக்தியோ மறுபிறப்போ நரகமோ சொர்க்கமோ உடனே கிடைக்காது அப்போது இறைவனால் மறைத்தல் தொழில் நடக்கும் ஒய்வு அளிக்கிறார் எனவே அது வரை அந்த உயிர் (ஆன்மா) சூக்கும உடலோடு அலையும் . அதாவது சூக்கும தேகம் என்பது கனவில் நம் உடலை காண்கிறோமே அது தான் அந்த உடலால் எந்த கிரியையும் செய்ய இயலாது அல்லவா ?அப்போது அதற்கு உணவு என்று எதுவும் வழங்கப்படாது .அந்த உலகத்திற்கு பிதுர் லோகம் என்று பெயர் . அவர்களுக்கு நாம் இந்த பூமியில் செய்யும் காரியங்களே படையல்களே அவர்களுக்கு திருப்தி தரும் உணவாகும் .அவை பிதுர் தேவதைகள்[சூரியன் ] மூலம் அவர்களை சென்றடையும் அப்போது அவர்கள் மகிழ்ந்து ஆசிர்வதிக்க நம் சந்ததி தழைக்கும் . 21 தலைமுறை முன்னோர்கள் இந்த பிதுர்கள் என்ற பெயரில் அடங்குவார்கள் . "மூவேழ் சுற்றம்[21 தலைமுறை முன்னோர்கள் ] முரணுறு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி" என்று மணிவாசக சுவாமிகள் அருளியுள்ளார் .இதன் பொருள் பிதுர்களால் வரும் நரக வேதனை இல்லாமல் அருள் புரியும் என்பதாகும்.இந்த பிதுர்கடனால் வரும் பாதிப்புகள் ஒருவருக்கு குறித்த காலத்தில் எந்த நல்ல விசயங்களும் நடக்காமல் தள்ளி போகும் . அதாவது திருமணம் நடக்காது நடந்தால் தாரத்தால் நிம்மதி இருக்காது .தாரம் அமைந்தால் தொழில் அடிபடும் தொழில் இருந்தால் மக்கட்பேறு கிடைக்காது அப்படி குழந்தை இருந்தால் ஊனமாக பிறக்கும் கல்வி சிறக்காது அந்த பிள்ளையால் அவமானங்கள் நேரும், கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகும் திருமணம் காதலாகவோ கலப்புமணமாகவோ இருக்கும்,வீண் பழி,அவமானம்,கடன், கஷ்டம் விவாகரத்து,அகால மரணம் ,தெய்வ நிந்தனை செய்வது,வறுமை என்று திரும்பிய திசையில் எல்லாம் பிரச்சினை என நிம்மதியில்லாமல் இருக்கும் இது ஆண் பெண் என பாகுபாடு இல்லாமல் இருபாலர்க்கும் பொருந்தும்.பிதுர் தோஷம் ஒருவருக்கு உள்ளது என்பது அவர்களின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 3,5,7,9,11 ஆகிய இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் அவர்கள் பிதுர்தோஷம் உள்ளவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம் .இராகு தந்தை வழியையும் கேது தாய் வழியையும் குறிக்கும் .இதற்கு ஒவ்வொரு அமாவாசையிலும் குறிப்பாக ஆடி,புரட்டாசி, தை அமாவாசையும் பிதுர்கடன் தர்ப்பணம் ஆற்ற உகந்த நாட்கள் ஆகும் .பிதுர் தோசம் போக்க பவானி கூடுதுறை, திருவையாறு, கொடுமுடி, மயிலாடுதுறை ,திலதர்பணபுரி,திருபூவணம்[மதுரை], திருவெண்காடு ருத்திர பாதம்,திருமறைகாடு ,கன்னியாகுமரி ,அவினாசி ,சென்னை மயிலாப்பூர் முதலிய சிவாலயங்களில் வழிபட்டு ,21 நல்எண்ணெய் அகல் தீபம் ஏற்றி ,கருவறை தீபத்தில் நெய் சேர்த்து ,எள் சாதம் தானமிட்டு,கால பைரவர் சன்னதியில் பஞ்ச தீப எண்ணெய் விட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்து , அருகில் உள்ள ஆலய தீர்த்த நீர்நிலைகள் உள்ள இடங்களில் பிண்டம் செய்து வைத்து வேண்டி நிவர்த்தி செய்யலாம் .உடனே தங்கள் பிதுர்கள் சிவகணமாய் அமர்வர் இதனை நாம் வெகு விரைவில் அனுபவத்தில் கண்டு உணரலாம் ..இங்கெல்லாம் சென்றும் தங்கள் பித்ருகள் இன்னும் நற்கதி அடையவில்லை என்பதை உணர்ந்தால் அதற்கும் ஒரு சிவ தலம் உள்ளது ..அதுதான் நமது சுந்தர மூர்த்தி சுவாமிகளின் தோழரின் ஊரான ,பிறக்க முக்தி தரும் "திருவாரூர்" ஆகும்..ஆலயம்கள் ,தீர்த்தங்கள் ,சென்றும் பிதுர் பூஜை செய்தும் நம் பித்துருகள் பேய் வடிவம் கொண்டு அலய்வது போல் நமக்கு கனவிலோ ,அல்லது ஈசன் அருளால் நம் நினைவிலோ தெரிந்தால் உடனே திருவாரூர் திருத்தலம் சென்று புரட்டாசி அல்லது ஆடி அமாவாசை தினத்தில் அங்கு உள்ள கயா தீர்த்தத்தில் நீராடி [திருவாரூர் திருகோயில் சற்று தள்ளி கேக்கரை என்னும் இடத்தில உள்ளது ],திருவாரூர் திருத்தலத்தை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் நம் பித்ருகள் பேய் வடிவில் இருந்தாலும் அவ் வடிவம் நீங்கி சிவ கணமாய் சிவ புரத்தில் அமர்வர் என்பது திண்ணம் .
."...அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. ."[திருவாசகம் ..சிவ புராணம் ]
பிணியுடை யாக்கை தன்னைப்
பிறப்பறுத் துய்ய வேண்டிற்
பணியுடைத் தொழில்கள் பூண்டு
பத்தர்கள் பற்றி னாலே
துணிவுடை அரக்க னோடி
எடுத்தலுந் தோகை அஞ்ச
மணிமுடிப் பத்தி றுத்தார்
மாமறைக் காட னாரே.[அப்பர்]
- சிவ. அ.விஜய் பெரியசுவாமி ,கல்பாக்கம்




பரிமேலழகர் உரையை வைதீக சார்பானது என்போர் திருவள்ளுவரைப் புரிந்து கொள்ளவில்லை, அல்லது கிறிஸ்துவக் காலனி ஆத்க்கம் பரப்பிய பொய்களின் அடிமை , தமிழர் மெய்யியலின் பகைவர்கள் என்பது தெளிவாகும்










தென்புலத்தார்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:43)
இறந்த முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்

இறந்த முன்னோர்களுக்கு கடன் செய்தல் நமது சமயத்தின்ன் மிக முக்கியமானது.
இந்தியாவெங்கும் மக்கள் ஆறுகள், கடல் என முன்னோர் கடன் செய்யும் செய்திகள்


பல ஆசாரமான மக்கள் அமாவாசை மற்றும் முன்னோர் திதி நாட்களில் தெய்வ வழிபாட்டிற்கு கோவில் செல்ல மாட்டார்கள். தாய் - தந்தை இறந்து ஒரு வருடம் கோவில்கள் செல்லவே மாட்டர்கள்

தெய்வப் புலவர் வள்ளுவர் தெய்வத்திற்கு முன்பாகவே முன்னொர் கடனை வலியுறுத்தும் வரிசையில் தந்துள்ளார்.
.

மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை.
தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.

பரிமேலழகர் உரை: தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம்.
(பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார' என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.)




  ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
5. எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்
கொல்களிற்று மீமிசை கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
10. முந்நீர் விழவி னெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (9)

நோயாளிகள், தென்புல வாழ்ார்க்குப் பிதிர்க்கடன் செலுத்தும் கற்பிள்ளைகள் பெ ரு தோர் ❖ሄጫ இத்திறத்தார் பாதுகாப்பான இடத்திற்கு முன்கூட்டியே சென்று விடுதல் வேண்டு மென்னும் அறத்தாறு காரண மாக அறிவிக்கும் உயர் குறிக்கோள் ஒன்று இருந்ததாகப் பின் வரும் புறநானூற்றுப் பாடல் கொண்டு அறியலாம்.
“ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை பீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெருஅ தீரும் எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென அறத்தாறு நுவலும் பூட்கை மறம்.” பாண்டியன் அறிவுடை நம்பி சங்க காலத்தில் பீடுற அரசோச்சிய பெருமன்னனுவான். புவி காவலகை விளங்கிய அவன் கவி நாயகனுகவும் விளங்கியிருக்கின்றான். அத்தகு அரசன் செல்வச் சிறப்பில் திளைத்திருந்திருப்பான் என்பதில் ஐயமில்லை. அம்மன்னன் பல செல்வங்களைப் படைத்திருப் பினும் குழந்தையாகிய குறைவற்ற செல்வம் ஒன்றனைப் பெருதவரிருட்பின் பயனில்லை என்று திட்டவட்டமாகத் தெளிவுற மொழிகின்றான். அவ்வாறு அவன் குழந்தைச் செல்வத்தின் ம r -ன் பி னே க் குறிப்பிடும்பொழுது குழந்தையின் ஒவியத்தினை நம் மனக்கண்முன் கொண்டு வந்து சிறுத்தி விடுகின்றான். இதோ அவன் வழங்கும் எழிற்காட்சி:
‘ படைப்புப பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை மீட்டி இட்டுக் தொட்டுங் கவ்வியும் துழந்தும்
3. புறநானூறு: 9:1-6

 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு:
பதவுரை: தென்-தென்திசை; புலத்தார்-இடத்திலுள்ளவர்; தெய்வம்-தேவர்; விருந்து-விருந்தினர்; ஒக்கல்-சுற்றத்தார்; தான் -தான்; என்று-என; ஆங்கு-(அசைநிலை).

.

தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐம்புலத்து ஆறு போற்றிக் காத்தல் தலையாய கடமையாம் என்பது பாடலின் பொருள்.
ஐம்புலத்து ஆறு என்றால் என்ன?

ஓம்பல் அல்லது ஓம்புதல் என்பது பல பொருள் குறிக்கும் ஒரு சொல்லாகும். இச்சொல் பேணுதல், போற்றுதல், காப்பாற்றுதல், பாதுகாத்தல், வளர்த்தல், தீங்கு வாராமற் காத்தல்; உபசரித்தல், சீர்தூக்குதல் என்ற பொருள்களைத் தரும். இங்கு போற்றுதல், காத்தல், பேணுதல் என்ற பொருள்களில் ஆளப்பட்டுள்ளது.
தலை என்பதற்கு முதன்மையான அல்லது சிறந்த என்பது பொருள்.

தென்புலத்தார்
தென்புலத்தாரை ஓம்புதல் எப்படி?
நம்மிடையே வாழ்ந்து மறைந்தோரை குறிப்பாக நமக்கு மிகவும் நெருங்கியவர்களும் அன்பிற்குரியவர்களும் இறந்த நாளில் அவர்களை நினைந்து வழிபடுதல் தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினையாகும். அவரை நினைத்து அடையாள முறையிற் சில உண்டிகளை, அவர் பெயரால், இரப்போர்க்கு சிறந்த உணவும் புத்தாடையும் உதவுதல் ஆகும். இது இன்றும் நம் இல்லங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள்தாம். தென்புலத்தார் என்போர் நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களின் அருள்பார்வை நம்மை வாழவைக்கும் என்பதும் நம்பிக்கை. நம்முடைய வாழ்க்கை முறையில் நம்முடைய முன்னோர்களை என்றும் மறப்பதில்லை. தெய்வம் கூட இரண்டாம் இடத்தில்தான். எனவேதான் வள்ளுவரும் தென்புலத்தாரை முதலில் வைத்துப் பாடினார்.
தென்புலத்தார் என்ற சொல்லுக்கு நேர் பொருள் தெற்குத் திசையிலுள்ள இடத்தில் இருப்பவர் என்பது.
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்(புறநானூறு 9)
(பொருள்: தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய இறுதிச் சடங்குகளைப் பண்ணும்) என்ற சங்கச் செய்யுள் அடி ஒன்றில் தென்புலவாழ்நர் என்ற தொடர் இறந்தார் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. இறந்த வீரனுக்காக நடப்பட்ட கல்லுக்கு இறந்த நாளில், பூச்சூட்டிப் புகை காட்டிப் பொங்கலிட்டு எல்லாருடனும் இருந்து உண்டதாக (நடுகல் வணக்கம்) வரலாற்றுச் செய்தி உண்டு..
இறந்துபோன மூதாதையர் தென்திசையில் உறைவதாகத் தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கையுண்டு. அதனால் காலமாகிவிட்ட முன்னோர்களைத் தென்திசையிலுள்ளவர் எனக் கூறுவது ஒரு மரபு. பொதுவாக சுடுகாடு/இடுகாடு ஒரு ஊரின் தெற்குத் திசையில் அமையும். இதுவும் தென்புலம் என்ற வழக்குக்குக் காரணமாகலாம். காலிங்கர் தென்புலத்தார் என்பதற்கு தன்குடியில் இறக்கப்பட்ட பிதிரர் என்று பொருள் கூறியுள்ளார். 
தம் குடும்பத்தில் தோன்றி மறைந்தவர் நினைவுகளைப் பாதுகாப்பது தென்புலத்தார் ஓம்பல் ஆகும்.

தெய்வம்
தெய்வம் என்ற சொல் பல்வேறு நிலையில் ஐயப்பாட்டிற்கு இடமாகிறது என்பார் தண்டபாணி தேசிகர். தொல்காப்பியம் மற்றும் சங்க கால இலக்கியங்களில் பயின்று வரும் 'தெய்வம்' என்ற சொல், இனக்குழுக்களின் சிறு தெய்வங்களையே குறிக்கிறது என்பர். எல்லாம் கடந்த முழுமுதற் பொருளுக்குக் கடவுள் என்பது பெயர். மற்றக் கடவுளரை தெய்வம், சிறு தெய்வம் அல்லது தேவர் என்று அழைப்பர். பரிதி இக்குறளுக்கான தனது உரையில் தெய்வம் என்ற சொற்கு 'வழிபடு தெய்வம்' எனப் பொருள் கண்டிருக்கிறார். இங்கு சொல்லப்பட்ட தெய்வம் குலதெய்வத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
இல்வாழ்வான் தெய்வத்தை ஓம்புதல் என்பது எவ்வாறு? இது தெய்வத்தைப் போற்றுவதைக் குறிக்கும். தெய்வத்தை நினைத்து வணங்குதலே தீமை செய்யாமைக்கும், உண்மை வழி நிற்பதற்கும் துணை செய்யும். கோயில்களில் செய்யப்படும் உணவுக் கொடையும் தெய்வ வழிபாட்டின் பாற்படும். குலதெய்வ வழிபாடு தெய்வத்திற்குச் செய்யும் கடன் ஆகும்.

விருந்து
விருந்து என்பது இங்கு விருந்தினரைக் குறிக்கும். முன்வந்து போனவரும் முன்னே அறியப்படாத அயலார் விருந்தினராவர். நாட்டால், மொழியால், சமயத்தால் அயல் வழியினர்; அறிமுகம் இல்லாதவர் விருந்தினராவர். விருந்தினர் எனப்படுபவர் நாடி வந்துள்ள அன்பர்கள்; அவர்களை மனம் நோகாதவாறு ஓம்புதல் பண்பாகும். இவர்களை வரவேற்று ஊண் உடை முதலியன வழங்கிப் பேணவேண்டும். இதனால் அயல்வழி உறவுகள் வளரும். குமுகாயம் விரிவடையும். புதிதாகத் தம் வீட்டை நாடி வரும் அயலார் யாவரே யாயினும் அவரை உவந்து வரவேற்று ஓம்புதல் அக்காலத்தில் மிகவும் வேண்டப்பட்டதாக இருந்தது. இது இல்லறத்தான் கடமையாயாகவும் இருந்தது எனத் தெரிகிறது. இன்றும் புதியவர்களுக்கு இயலும் வரை உதவவது அறச்செயல்தான்.

ஒக்கல்
ஒக்கல் என்பது சுற்றத்தைக் குறிப்பது. சுற்றம் என்பது இல்வாழ்வானது உடன் சுற்றமாகும். பிறப்பு மற்றும் திருமணத்தினால் உண்டான இயற்கையான உறவுகள், தொடர்புகள் இவற்றைக் குறிக்கும். சுற்றத்தார்களே உண்மையில் ஒருவரின் உடனடிச் சமூகம். இல்வாழ்வானது உடன்பிறந்தார் முதற்சுற்றம். அடுத்துத் தந்தை, தாய்வழி, உடன் பிறப்புச் சுற்றம், தம் வாழ்க்கைத் துணைவழி உடன்பிறப்புச் சுற்றம் என்றவாறு விரியும். 
சுற்றத்தினரைப் பேணுதல் என்பது அவர்தம் வாழ்க்கைத் தேவைகளைப் பெறுதற்குரிய வாயில்களை அமைத்துத் தருதல் என்பது. சுற்றம் பழகும் பழக்கங்களால் அகவுணர்வுகள் செழுமையாக வளர்ந்து பயன்தரும். அதனால் அடிக்கடி கண்டும் கலந்தும் மகிழ்ந்து உரையாடியும் கலந்து உண்டும், உதவிகள் செய்தும், உறவு நிலைகளைப் பேணுதல் இன்றியமையாதது. சுற்றத்தினரை ஓம்பல் குடும்பம் வளமையாக அமையத் தூணை செய்யும். உறவுகள் செழிப்பாக அமையாத சுற்றம் சுமையாகிவிடும் என்பர்.
செல்வ நிலையிலிருப்போர் தம் சுற்றத்தாரை ஓம்புதல் வேண்டற்பாலது என்ப்தனைச் 'சுற்றம் தழாஅல்' எனும் அதிகாரத்திலும் வள்ளுவர் வலியுறுத்துகின்றார்:
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான் 
பெற்றத்தால் பெற்ற பயன்(குறள் 524) (பொருள்: சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்.)

தான்
தன்னைப் போற்றிக் காத்தலும் இன்றியமையாதது என்றது தான் இன்றி பிறர்க்குச் செய்யவேண்டிய அறங்களைச் செய்தல் இயலாது என்பதனால். சுவரின்றிச் சித்திரம் வரையமுடியாது. ஆதலால், பிறருக்குத் தொண்டு செய்பவன் தன்னையும் பேணிக் கொள்ளல் வேண்டும். தன்னைப் போற்றுதலைக் குற்றம் என்போரும் உளர். ஆனால், வள்ளுவர் வெளிப்படையாகவே உன்னையும் போற்றிக் காத்துக் கொள் என உலகறிய உரைக்கின்றார். 
குடும்பத்தலைவன் இல்வாழ்க்கையின் ஆக்க நிலையில் அமைந்த உறுப்பு. ஆதலால் அவனும் காலத்தில் உணவு அளவாக உண்ணுதல், உடல்நலத்திற்குரிய பயிற்சிகளை மேற்கொள்ளல், நல்ல நூல்களைக் கற்றல், அன்பு நலத்தை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவை வழி தன்னைப் பேணிக்கொள்ளுதல் வேண்டும்.
'எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று' என்று பரிமேலழகர் தன்னை ஓம்புதலும் அறச்செயலே என்பதற்கு விளக்கம் தந்தார்.

ஐம்புலத்து ஆறு என்றால் என்ன?

ஐம்புலத்து ஆறு என்ற தொடர்க்கு 'ஐந்திடமாகிய நெறி' என மணக்குடவரும் 'ஐந்து கூற்று நெறி' எனக் காலிங்கரும் 'ஐந்திடத்தும் செய்யும் நெறி' எனப் பரிமேலழகரும் உரை கூறுவர். 'ஐந்து வகையாரிடத்தும் செய்யப்படும் நெறிச் செயல்களை' என்றனர் கா சுப்பிரமணியபிள்ளையும்., சொ தண்டபாணியும்.. ஐந்திடத்திலும் அறநெறியை என்பது திரு வி க., குழந்தை ஆகியோர் உரை. 'ஐந்திடத்தும் செய்யப்படும் அறநெறி' என்பது பொருத்தமாகும்.

தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐந்து இடத்தும் செய்யப்படும் நெறிச் செயல்களைப் போற்றுதல் தலையாய கடமையாம் என்பது இக்குறட்கருத்து.







தென்புலத்தார் தெய்வ வழிபாடு 

                   - முனைவர் ந. இரா. சென்னியப்பனார்                                                                       http://www.saivasiddhanta.in/view_article.php?page=59 

துறக்கப்படாத உடலைத் துறந்து வெந்தூதுவரோடு
இறப்பன் இறந்தால் இருவிசும்பு ஏறுவன் ஏறிவந்து
பிறப்பன் பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன் பேர்
மறப்பன் கோலோ என்று என்னுள்ளம் கிடந்து மறுகிடுமே.
                                                       - திருநாவுக்கரசர்

மக்கள் வாழ்க்கையில் பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டும் இயல்பானவை. இறத்தல் என்பது பருவுடம்பிலிருந்து உயிர் பிரிவது. உடம்பு வேறு உயிர் வேறு என்பது தமிழர் கொள்கை.

“காலம் உலகம் உயிரே உடம்பே” என்ற தொல்காப்பிய நூற்பாவால் உயிர்வேறு உடம்பு வேறு என்பது தெரிகிறது. “சென்ற உயிரின் நின்றயாக்கை” என்று தொல்காப்பியர் குறிப்பிடுவதால் உடம்பிலிருந்து உயிர் பிரியும் என்பது தெரியவருகிறது. உடம்பை விட்டு உயிர் நீங்குவதை.

“குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே
 உடம்போடு உயிரிடை நட்பு”
என்று திருவள்ளுவரும் குறிப்பிட்டுள்ளார்.

இறப்பு என்பது நியதி தத்துவப்படி அவரவர்க்குரிய வாழ்நாளில் வரையரை அடிப்படையில் அமைந்தது.

“பேரிழவு இன்பமொடு பிணி மூப்புச் சாக்காடு
 என்னும் ஆறும் முங்கருவுள் பட்டது”
 (சிவஞான சித்தியார்)

என்பதனால் தாய்வயிற்றின் கருவில் இருக்கும் போதே இறப்பின் நிலை வரையரை செய்யப்படுகிறது.

இறந்தவர்க்குப் பலவித சடங்குகள் செய்தல், சாப்பறை கொட்டுதல், மகளிர் மார்பில் அடித்துக் கொள்ளுதல், பிண்டம் வைத்தல் முதலிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.

உயிர் நீத்த உடலை முதுமக்கள் தாழியில் இட்டுச் சமாதி செய்து வழிபாடு செய்வது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே நடைபெற்று வந்துள்ளது. சங்க காலத்திலேயே சுடுதல், புதைத்தல் என்ற இரண்டும் வழக்கில் இருந்துள்ளன.

“சுடுவோர் இடுவோர் தொடுகுழி படுப்போர்
தாழ்வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்”

என்று மணிமேகலை இறந்தோருடலை அடக்கம் செய்யும் முறையைக் கூறுகிறது.

உடம்பை விட்டுப் பிரிந்த உயிர் நுண்ணுடம்புடன் மேலே செல்லும். செய்த வினைக்கேற்பத் தீமையை நரகத்திலும் நன்மையைச் சொர்க்கத்திலும் அனுபவிக்கும்.

பின்னர் மேகத்தில் இருந்து வரும் மழைத்துளி வழியே நிலவுலகு வந்து பயிர் பச்சைகளில், தானியம் காய்கறிகளில் தங்கித் தந்தை வயிற்றில் இரண்டு மாதம் இருக்கும். கணவன் மனைவி உடலுறவின்போது ஆண் விந்துவாகப் (சுக்கிலம்) பெண்ணின் கருப்பையில் உள்ள பெண் கருமுட்டை (சுரோணிதம்) யில் கலக்கும். கலந்து கருவாகிக் குழந்தையாய்ப் பிறக்கும். சைவத்திருமுறைகளும் சாத்திரங்களும் இவற்றை விரிவாகக் குறிப்பிடுகின்றன.

இறப்பதைப் பற்றி பலவிதமான தவறான கருத்துக்கள் பரவியுள்ளன. இறந்தவர்களுக்கு வழிபாடு செய்வதுதான் அவர்கள் மக்கள் செய்யவேண்டிய சிறந்த கடமையாகும். துறவறத்தாராக இருந்தால் அவர்கள் இறைவன் அடி அடைந்த நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் வழிபாடு செய்ய வேண்டும். சித்திரைச் சதயம் திருநாவுக்கரசர் வைகாசி மூலம் திருஞானசம்பந்தர், ஆனி மகம் மாணிக்கவாசகர், ஆடி சுவாதி நம்பியாரூரர் முதலியன அவ்வாறமைந்த குருபூசை வழிபாடாகும். இல்லறத்தாராக இருந்தால் அவர்கள் காலமான திதியில் செய்ய வேண்டும். ஆண்டுதோறும் இறந்த மாதத்தில் வருகின்ற வளர்பிறை, தேய்பிறை திதியில் வழிபாடு செய்ய வேண்டும்.

முதல் திதி வழிபாடு காலமான பதினாறாம் நாள் செய்ய வேண்டும், பதினாறாம் நாள் அதே திதிவரும். தற்காலத்தில் இறந்த நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வீடு அடைத்தல் முதலியன செய்யப்படுகின்றது.

இறந்தால் வீடு மூட வேண்டிய நட்சத்திரங்கள் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி 6மீ, ரோகிணி 4மீ, கார்த்திகை, உத்திரம் 3மீ, மிருகசீரிடம், சித்திரை, புணர்பூசம், விசாகம், உத்திராடம் 2மீ என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டு அதற்கு பரிகாரங்களும் விரிவாக சொல்லப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், திருமுறைகள், புராணங்கள், கல்வெட்டுக்கள் முதலியவற்றில் வீடு அடைக்கும் நிகழ்ச்சி எங்கும் குறிப்பிடப்படவில்லை.

திருநாளைப் போவார், ஏயர்கோன் கலிக்காமர் ரேவதி, புகழ்ச்சோழர் கார்த்திகை, சண்டேசுவரர் உத்திரம், மங்கையர்க்கரசியார் ரோகிணி, திருநாவுக்கரசர் சதயம், இசைஞானியார் திருக்குறிப்புத் தொண்டர் சித்திரை, குமரகுருபரர் விசாகம், உமாபதி சிவாச்சாரியார் அவிட்டம், கச்சியப்பமுனிவர் புனர்பூசம் முதலியோர் குருபூசை அடைக்க வேண்டிய நட்சத்திரங்களில் வருகின்றன. அவர்கள் வரலாறு கூறும் நூல்களில் எங்கும் அடைக்கப்பட்ட செய்தி குறிக்கப்படவில்லை.

இன்று பெரிய மருத்துவமனைகளில் பலர் இறக்கின்றார்கள். அடைக்கும் நட்சத்திரக் கணக்குப்படி அங்கு அடைக்க இயலுமா?

சென்னை, மும்பை, டில்லி முதலிய நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் வாழ்கின்றனர். அடைக்கும் நட்சத்திரத்தில் இறந்தால் அங்கு அடைத்துவிட்டு எங்கே செல்வது?
விபத்துக்களில் பலர் அடக்க வேண்டிய நட்சத்திரத்தில் இறக்கின்றனர், எங்கே அடைப்பது?

இறந்தவர் படத்தை வீட்டில் வைத்து காலை, மாலை வழிபாடு செய்தால் இறந்த உயிர் வந்து பார்த்து மகிழும். இறையருளும் கிட்டும். அடைத்து வைத்துவிட்டால் இருட்டு மிகும். எலி, பெருச்சாளி முதலியவை குடியேறும். எனவே அடைப்பது எந்தவிதத்திலும், விஞ்ஞான முறைப்படியும், மெய்ஞ்ஞான முறைப்படியும் தவறாகும். விளக்கேற்றி வழிபாடு செய்வதே மிகச்சிறந்தது.

Tuesday, June 19, 2018

அந்தணர்-திருவள்ளுவர் பூனூலை மறைக்கவே மேல்தூண்டு - கருணாநிதி



14ம் நூற்றாண்டு சிலை மயிலாப்பூரில் கிடைத்த பூனூலோடு தான்.


 1960ல் திருவள்ளுவர் ஸ்டாஅம்ப் வெளியிட மத்திய அரசு படம் கேட்ட போது அன்றுவரை பெரும்பாலும் பூனூலோடு தான் வள்ளுவர் இருந்தார்,  திருவள்ளுவர் பூனூலோடனான அந்தணர் என்பதை சிலர் வற்புரித்தனர் ஆனால் திராவிட-கம்யூனிச- கிறிஸ்துவர் எனப் பலர் விரும்பாதிட    பூனூலை மறைக்கவே மேல் தூண்டு- 2011ம் ஆண்டு திருவள்ளுவர் தின கருணாநிதி தன் பேச்சில் குறிப்பிட்டதன் வ லைப் பக்க படக் காட்சி,
திருவள்ளுவர் வேதத்தை நேரடியாக 3 குறட்பாக்களில் கூறுகிறார்.

ஒரு அரசன் நல்லாட்சியை கூறும் அதிகாரம் -செங்கோன்மை
 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது  மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை) 
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.   

மோசமான ஆட்சியினால் வரும் கேடு  கொடுங்கோன்மை 
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
 காவலன் காவான் எனின்.                               (560 கொடுங்கோன்மை) 
 நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.

திருக்குறளிற்கு பின்பான சிலப்பதிகாரம் சொல்வது 
  “கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை; 
வடமொழி வாசகம் செய்த நல்லேடு 
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)

 வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை 

 தமிழர் மெய் இயல் மரபில் வடமொழியில் பல முக்கிய நூல்கள் தான் பயன்படுத்தப் பட்டன எனத் தெளிவாய் நிருபிக்கிறது.


 பூனூல் அணிந்து திருவள்ளுவர் வேடமிட்டு வந்த சிறுவனை முதல்வர் கருணாநிதியும் மற்றவரும் மேடையில் இழிவாய் கேலி செய்யும் புகைப்படம் (சமுகவலை தளத்தில் பதிவுகள்)

உலகில் பாரதம் மிகப் பெரும் செல்வ செழிப்பான நாடாய், கலை, இலக்கியம், தொழில் வளம் அனைத்திலும் என 2000 வருடங்கள் இருந்தன, கிறிஸ்துவ விஷநரிகள் இத்டியா நுழைந்து மோசமான ஆட்சியில் 600 லட்சம் கோடிகள் கொள்ளை அடித்தும், 10 கோடி மக்களை செயற்கை பஞ்சம் மூலமும் கொன்றான். இவற்றை மறைக்க ஆரியர் திராவிடர் எனும் போயான கட்டுக் கதையை பரப்பி பிரிவினை தூண்டி சென்றான்.

இந்திய தத்துவ ஞான மரபின் பெருமையை மறைக்கும் கிறிஸ்துவ காலனி ஆதிக்க அடிமைகளாய் இன்றும் திராவிட இயக்கங்கள் உள்ளன  என்பதன் ஒரு ஆதாரமே மேலுள்ள படம், மிஅகவும் அநாகரிமான மேடை நாகரீகமற்ற செயல்



திருவள்ளுவர் காலம் - தமிழக அரசு கருணநிதி ஆட்சி வெளியிட்ட நூல்

தமிழக அரசு கன்னியாகுமரியில் நின்று எழுதும் வடிவில் திருவள்ளுவர் சிலை திறப்பின் போது வெளிய்ட்ட நூல்  குறளமுதம்
திருவள்ளுவர் காலம் - சாமி சிதம்பரனார்

தமிழக அரசு கன்னியாகுமரியில் நின்று எழுதும் வடிவில் திருவள்ளுவர் சிலை திறப்பின் போது வெளிய்ட்ட நூலில்

//திருக்குறளும் பிறப்புகளும் ஆத்மாவும் என ஒரு 2000 ஆண்டுக்கு முன்பு; 3000 ஆண்டுக்கு முன்பு எனக் கூறுவது தான் வள்ளுவருக்கு பெருமை எனச் சிலர் எண்ணுகின்றனர்// 
அன்றைய நிலையில் புலவர் திருக்குறளை 600 வாக்கில் என்பதை ஏற்று எழுதியது, ஆனால் இன்று நடுநிலையாளர் ஏற்பது பொ.ஆ.800 வாக்கில் தான் திருக்குறள் இயற்றப் பட்ட காலம்.





 (சாமி சிதம்பரனார் 1930களில் ஆண்டுகளுக்கு திராவிட/சுயமரியாதை இயக்க இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பகுத்தறிவு, புரட்சி, குடியரசு, திராவிடன், விடுதலை அவற்றுள் சில. இவை தவிர தினமணி, வெற்றிமுரசு, சரஸ்வதி ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார். 1936-38 காலகட்டத்தில் அறிவுக்கொடி என்னும் பத்திரிக்கையை கும்பகோணத்தில் நடத்தினார். 1939 வரையான பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை “தமிழர் தலைவர்” என்னும் பெயரில் வெளியிட்டார். இந்நூல் இன்று வரை பெரியார் ஆய்வாளர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. 1940களில் பெரியாருடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாட்டால் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறினார். திராவிட இயக்கம் முன்வைத்த திராவிட-ஆரிய முரண் கொள்கையை மறுத்து இருவரும் ஒரே இனம் என்ற கருத்தை வலியுறுத்தினார். சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற நூல்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையல்ல என்றும் பிற்காலத்தியவை என்றும் நிறுவ முற்பட்டார். இளங்கோவடிகள் செங்குட்டுவனின் உடன்பிறந்தவர் அல்லர் எனவும் சிலப்பதிகாரத்தில் கூறப்படும் சேரன் செங்குட்டுவனின் வட நாட்டுப் படையெடுப்பு (கனக-விசயர்களை வெற்றி கொள்ளுதல்) தமிழர்கள் வடநாட்டவர்பாற் கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் திணிக்கப்பட்ட புனைவு என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தார். 1950 களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழான ஜனசக்தி யில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.)


தொல்காப்பியமும் தமிழ் எழுத்துக்களும் வடமொழியும்


தொல்காப்பியர் காலம் - தமிழ் கல்வெட்டுகள் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சியின்படி தமிழ் முழுமையாய் 30 எழுத்துக்களும் தனித் தனி உரு பெற்றது 4ம் நூற்றாண்டு இறுதியில் தான், அதன் பின்னர் புள்ளி மயங்கியல் போன்றவைகளை விளக்கும் தொல்காப்பிய சூத்திரங்கள் உருவாகும் காலம் 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் என தற்போது பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்கிறது.
பெர்கிலியின் கொலம்பியா பல்கலை கழக பேராசிரியர் திரு.ஜியார்ஜ் ஹார்டு மற்றும் இஸ்ரேலின் ஜெருசலேம் ஹீப்ரு பல்கலை கழக பேராசிரியர் திரு.டேவிட் ஷுல்மன்; இருவரும் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை உள்ளவர்கள்; இருவருமே சங்க இலக்கியம் முதல் இன்றுவரை தமிழ் இலக்கியம சமஸ்கிருதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டு பெற்றும் கொடுத்தும் வளர்ந்து வந்துள்ளது, தொல்காப்பியம் சமஸ்கிருத இலக்கணத்தை பல இடங்களில் பயன்படுத்தி உள்ளது என்பர்



தமிழ் மெய் எழுத்துகளிலும், பின்னர் உயிர் மெய்யிலும் சிறப்பு எழுத்துக்கள் "ள" "ற" "ன"; இவை வட மொழியில் கிடையாது, எனவே தான் தமிழுக்கே தனியாய் இவை பீனர் உருவாகியவை ஆதலால் கடைசி எழுத்துக்களாய் சேர்த்தார் தொல்காப்பியர் என பல அறிஞர்கள் கூறியதை பேராசிரியர் சு.இன்னாசி அவர்கள் தன் எழுத்தியல் நூலில் கூறுவார்.
தமிழ் உணர்வாளர்களால் தமிழ் எழுத்துக்கள் வடமொழி எழுத்திலிருந்து தான் உரு பெற்றது என்பதை ஏற்க இயலாமல் போக, கே.பி.அறவாணன் ஒரு போலி ஆய்வு கட்டுரை படித்தார், ஆனால் ஆய்வுலகம் ஏற்கவில்லை என்கிறார் பேராசிரியர்.
(வடமொழி என்கையில் சமஸ்கிருதம் என்பதைவிட அதன் பேச்சு வழக்கு மொழியான ப்ராகிர்தத்தையே குறிக்கும்)